திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு இன்று முதல் அனுமதி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (26.02.2022) முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் போன்றவை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சாத்தனூர் அணை பூங்கா மற்றும் மிருகண்டா அணை, குப்பநத்தம் அணை பகுதியிலும் இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.