திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தேசிய வாக்காளர் விழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தேசிய வாக்காளர் விழாவை முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு மு பிரியதர்ஷினி ,தனி துணை ஆட்சிய சமூக பாதுகாப்பு திட்டம் திரு வெங்கடேசன், மாவட்ட வழங்கள் அலுவலர் திரு. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) திரு. வீ. வெற்றிவேல், திரு. குமரன் (தேர்தல்), திருமதி. கனிமொழி (நிலம்), திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி. ஆர். மந்தாகினி துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.