திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி திட்ட ஆய்வுக் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று (14.02.2023) நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.வீர் பிரதாப் சிங், செல்வி.ரஷ்மி ராணி, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.