தமிழ்நாடு பசுமை திட்டத்தின் கீழ் இலவச தேக்கு மரக்கன்றுகள் தனியார் பட்டா நிலங்களில் வனத்துறை மூலம் நடவு செய்ய திட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வனச்சரகம், 2023-24 நிதி ஆண்டு தமிழ்நாடு பசுமை திட்டத்தின் கீழ் இலவச தேக்கு மரக்கன்றுகள் தனியார் பட்டா நிலங்களில் வனத்துறை மூலம் நடவு செய்ய திட்டம் உள்ளது. போளுர், கலசபாக்கம் மற்றும் சேத்துப்பட்டு தாலுக்கா எல்லைக்குட்பட்ட விருப்பமுள்ள தண்ணீர் வசதியுடைய விவசாய பயனாளிகள் தங்கள் விவரத்தினை நேரில் வந்து போளுர் வனச்சரக அலுவலகத்தில் உரிய படிவத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வனச்சரக அலுவலர் போளுர் வனச்சரகம் போளுர்

முகவரி:
வனச்சரக அலுவலகம்,
பங்களாமேடு,
முருகாபாடி கூட்ரோடு,
போளுர் – 606 803.

தேவையான ஆவணங்கள்:

1. பட்டா அல்லது சிட்டா நகல்-1

2. ஆதார் நகல் -2

3. புகைப்படம் -2

4.வங்கி கணக்கு புத்தக நகல்-1