Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
பெட்ரோல் பம்ப்களில் வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்!!

தினமும் பைக்கிலும் காரிலும் பயணம் செய்பவர்கள் பெட்ரோல் மற்றும் டீசலை அவசியமாக நிரப்புகிறார்கள். பெட்ரோல் பம்பை தேர்வு செய்யும் போது பலர் எரிபொருளின் தரம் மற்றும் தங்களுடைய முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கிறார்கள்.

இந்நிலையில், சமீபமாக சமூக ஊடகங்களில் சில பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் முறையில் குழப்பம் ஏற்படுகிறது என்ற புகார்கள் அதிகரித்து வருகின்றன.

பெட்ரோல் பம்பில் எரிபொருள் நிரப்பும் போது, பம்ப் மீட்டர் பொதுவாக 0.00 இலிருந்து தொடங்க வேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில், 0.00 காட்டியவுடன், மீட்டர் நேரடியாக 5 அல்லது 10 என மாறுவதைப் பலரும் கவனிக்கின்றனர். அதாவது, 1, 2, 3, 4 ஆகிய எண்கள் காணப்படாமல் நேரடியாக குறைந்த அளவிலான எரிபொருள் அளவுக்கே திருப்பப்படுகிறதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

இதனால்தான், பெட்ரோல் நிரப்பும் போது மீட்டர் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குகிறதா என்பதுடன், ஆரம்ப கட்டத்தில் அதன் ஓட்டத்தை கவனித்துப் பார்ப்பது முக்கியம்.

அடர்த்தி மதிப்பையும் கவனிக்க வேண்டும்

மீட்டரின் மூன்றாவது வரியில் பெட்ரோல் அல்லது டீசலின் அடர்த்தி மதிப்பு காட்டப்படுகிறது. இது எரிபொருளின் தரத்தை உணர்த்தும் ஒரு முக்கிய குறியீடு. இதையும் கவனமாக பார்க்கும்போது தரமான எரிபொருள் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

புகார் செய்யும் வழிகள்

எரிபொருள் நிரப்பும் முறையில் ஏதேனும் குழப்பம் ஏற்படுகிறது என்று நீங்கள் நினைத்தால், கீழ்க்கண்ட கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொள்ளலாம்:

இந்தியன் பெட்ரோலியம் – 1800-22-4344
இந்துஸ்தான் பெட்ரோலியம் – 1800-2333-555
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் – 1800-2333-555

அதிதொகைத் தகவல்களுக்கு அல்லது இணையதளத்தில் புகார் பதிவு செய்ய, இந்திய அரசின் பொது குறை தீர்க்கும் போர்டல் மூலம் https://pgportal.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

உங்களது கவலையைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.