i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (17.10.2022) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு. பிரியதர்ஷினி செய்யார் சார் ஆசிரியர் செல்வி. அனாமிகா இ.ஆ.ப., மற்றும் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.