tvm-collector-ofiice

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (20.02.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

மேலும் நல துறை சார்பில் இரண்டு நபருக்கு காதொலி கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி,தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திரு.வெங்கடேசன்,துணை ஆட்சியர் (பயிற்சி)திருமதி கலைவாணி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.தங்கமணி,திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆர்.மந்தாகினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.