திருவண்ணாமலை-காட்பாடி மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் பராமரிப்பு காரணமாக இன்று 18-ம் தேதி சென்னை – திருவண்ணாமலை மெமு பயணிகள் ரயில் இரு மார்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காட்பாடி – திருப்பதி மெமு ரயிலும் அரக்கோணத்தில் இருந்து காட்பாடி வரை இயக்கப்படும். காட்பாடியில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயிலும் பகுதியாக ரத்து என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
