மார்கழி 1ஆம் நாள் பருவதமலை கிரிவலம் பிரசித்தி பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதில் வெள்ளைந்தாங்கி ஈஸ்வரன் ஆலயத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதற்கான ஆலய வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

































