
குரங்கணில்முட்டம்- கல்மண்டபம்
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து பாலாற்றை கடந்தால் சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் தூசி என்ற கிராமம் அருகாமையில் இருந்து பிரியும் பாதையில் 2 கிலோமீட்டர் சென்றால் பாலாற்றின் கரைக்கு அருகில் குரங்கணில் முட்டம் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. இத்தலத்து இறைவனை வணங்குபவர்கள் வினைப்பயன்களாகிய துன்ப இன்பங்களை காணுதல் இல்லாதவர் ஆவர் என்றும், குரங்கணில் முட்டத்தை முறையாக வணங்குபவர், வினைகள் இல்லாதவர் ஆவர்.




































