தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்த க்யூஆர் கோடு முறை அறிமுகம்!

நியாயவிலைக் கடைகளில் பணம் செலுத்த, க்யூஆர் குறியீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 602 நியாயவிலைக் கடைகளில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக 602 நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் பொருள்களை பெற பணமில்லா பரிமாற்ற பரிவர்த்தனை (கியூ ஆர் கோடு) நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பணப்பரிமாற்றத்தை குறைத்து, எண்ம முறையில் பரிமாற்றத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயன்று வருகின்றன. அதன் ஒரு நடவடிக்கையாக, தமிழகத்தில் முதல் முறையாக நியாய விலை கடைகளில் க்யூ ஆர் கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

தற்போது, நடைபாதை கடை முதல் மிகப்பெரிய வணிக வளாகங்கள் வரை மின்னணு பண பரிவர்த்தனையே நடைபெற்று வருகிறது. இதனால் எப்போதும் கையில் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. இந்த வசதியை கூட்டுறவுத்துறை நியாய விலை கடைகளுக்கும் கொண்டுவர முடிவு செய்து, அதனை முதல் கட்டமாக 602 நியாய விலை கடைகளில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

அதன்படி, தமிழ்நாட்டில் முதன்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 602 கூட்டுறவு நியாய விலை கடைகளில் பொதுமக்கள் வாங்கும் பொருள்களுக்கு பணம் மாற்றம் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் க்யூஆர் கோடு முறையினை கூட்டுறவு சங்கங்கள் பதிவாளர் சண்முகசுந்தரம் காஞ்சிபுரம் எம்.வி.எம்.பி. நகரில் அமைந்துள்ள நியாய விலை கடையில் துவக்கி வைத்தார்.