உள்ளாட்சி தினத்தை ஒட்டி 860 கிராம ஊராட்சிகளிலும்  இன்று கிராம சபை கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் இன்று (1.11.2022) செவ்வாய்க்கிழமை உள்ளாட்சி தினத்தையொட்டி காலை 11 மணி அளவில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. அனைத்து பொதுமக்களும் இந்த கிராம சபை கூட்டங்களில் பங்கு பெற்று கூட்டத்தில் வைக்கப்படும் பொருட்கள் குறித்து விவாதிக்கலாம்.

இந்த கூட்டங்களில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு.முருகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.