i5 Sunrise City Property Promo Banner
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது!

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 29ம் தேதி தொடங்கி நேற்று ( 31-ந்தேதி) வரை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று ( ஜூன் 1-ந்தேதி) தொடங்கியுள்ளது. இன்று (01.06.2023) முதல் 10-ந்தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெற இருக்கிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22-ந்தேதி வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.