விவசாயிகளுக்கு ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம்!

தமிழ்நாடு அரசின் அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.

தேவையான ஆவணங்கள்:-

1. ஆதார் அட்டை நகல்

2. ஸ்மார்ட் கார்டு நகல்

3. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் நகல்

4. பட்டா நகல்

5. விவசாயினுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 1

6. கைப்பேசி எண்