திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கொரோனாவால் ஏற்கனவே ஒருவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. செய்யாறு சுகாதார ஆய்வாளரை தொடர்ந்து சுகாதார மேற்பார்வையாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.