திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோயிலில் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் (26.11.2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 03.08 மணிக்கு முடிவடைகிறது, பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.