
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கீழ்ராவந்தவாடி கிராமத்தில் உள்ள சிற்பக்குளம் (அம்மாகுளம்) 16-ம் நூற்றாண்டின் நாயக்கர் மன்னர்கள் காலத்தை சார்ந்ததாக இருந்திருக்கும் என கருதப்படுகிறது. இதில் ராமாயணம், மகாபாரதம், பெரியபுராண காட்சிகள் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இதன் நான்கு வழிகளிலும் நந்தி சிலைகள் உள்ளன.


































